Sri Krishna Jayanthi Srimad Bhagavata Sapthaham

எந்த ஒரு தர்மமும் அதை செய்யக்கூடிய காலம், தேசம், வ்யக்தி இவைகளால் மிகப்பெரிய பலனைத் தரும். உதாரணமாக நாம் தினமும் ஜபம் செய்தாலும், க்ரஹண காலத்தில் ஜபம் செய்தால் அதே ஜபம் கோடி மடங்கு பலனைத் தரும். அந்த ஜபத்தை குரு ஸந்நிதானம், விஷ்ணு ஸந்நிதானம், பசுமாட்டு கொட்டில், புண்ய நதி தீரத்தில் செய்தால் கோடி மடங்கு பலனைத் தரும். ஸ்ரீமத் பாகவத பாராயணம் நாம் பல பிறவிகளில் தெரிந்து செய்த, தெரியாமல் செய்த பாவங்களைப்  போக்கக்கூடியது. நம்முடைய பித்ருக்களைப் பிரேத அவஸ்தையிலிருந்து வைகுண்டம் அனுப்பக்கூடியது. பாராயணம் செய்யக்கூடிய இடத்தில் ஸர்வ தேவதைகளும் வந்துவிடுகின்றார்கள்.  பாராயணம் செய்யக்கூடிய இடத்தில் எல்லா நதிகளும் வந்துவிடுகின்றன.  இதற்குச் சமமான புண்யமும் இல்லை – தர்மமும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலே கிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டி செய்யக்கூடிய இந்த பாராயணம் ஞானபக்தி வைராக்யத்தைக் கொடுக்கக்கூடியது. அதற்கும் மேலாக மனதில் சாந்தியை கொடுக்கக் கூடியது.

தினமும் ஒளிபரப்பாகும் இந்த பாகவத பாராயணத்தை முடிந்தால் புத்தகத்தை வைத்துக்கொண்டு FOLLOW செய்வோம். இல்லையென்றால் நமது வீட்டில் இதன் சப்தத்தை ஒலிக்கச் செய்வோம். இதைப்போல் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது. நாமும், நமக்கு தெரிந்தவர்களிடமும் சொல்லி இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோமாக

– ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி

Leave a Comment

  • Mohan Murali August 13, 2020, 10:28 pm

    நமஸ்காரம் குருஜி ராதே ராதே. அப்படியே செய்கிறேன் ஆசிர்வாதம் பண்ணுங்க ராதே ராதே.

  • ParvathySrinivasan August 14, 2020, 10:20 pm

    Radhe Radhe

  • ParvathySrinivasan August 14, 2020, 10:20 pm

    Radhe

  • ParvathySrinivasan August 14, 2020, 10:21 pm

    Radhe krishna

  • Uma Maheshwari k August 15, 2020, 8:58 am

    RadheRadhe

Recent Posts

Satsang at Ernakulam

Read more

Satsang at Salem

Read more

Sri Swamiji’s Event Updates – April 2024

April 19th being Ekadasi, Sri Swamiji did Tirumanjanam and Pooja to Sri Madhuri Sakhi Sametha Sri Premika Varadan at Madhurapuri Ashram. On April 18th morning, Sri Swamiji attended Sri Sundarakanda Parayanam at a devotee’s residence in Chennai. On April 17th morning, Sri Swamiji participated in the Sri Rama Navami celebrations at Premika Bhavanam. In the Read more